இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம்

வியாழன், 13 நவம்பர், 2025

 



அரசுப் பள்ளி ஆசிரியர்​களில் ஊதிய முரண்​பாடு​களை சரி செய்​வதற்​கான பணி​களை மேற்​கொள்ள அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.


இதுகுறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: பள்​ளிக்​கல்வி இயக்குநரகத்​தில் இணை இயக்குநர்​கள், அலு​வலர்​களுக்​கான பணி பொறுப்​பு​கள் மாற்​றப்​பட்டு ஆசிரியர்​கள், பணி​யாளர்​களின் ஊதிய முரண்​பாடு சார்ந்த கருத்​துருவை நிதிக்​கட்​டுப்​பாடு அலு​வலரின் நிர்​வாக பொறுப்​பில் செயல்படுத்த ஆணையிடப்​பட்​டிருந்​தது.


இந்​நிலை​யில், ஊதிய முரண்​பாடு சரிசெய்​தல் சார்ந்த பணி​களை பள்​ளிக்​கல்​வித் துறை இணை இயக்​குநர்​களுக்கு பின்​வரு​மாறு ஒதுக்​கீடு செய்து ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள், மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள், நேர்​முக உதவி​யாளர்​கள் (இடைநிலை), உயர்​நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்​கள், நேர்​முக அலு​வலர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள், பணி​யாளர்​கள் ஆகியோர் தங்​கள் ஊதிய முரண்​பாடு​களை இணை இயக்​குநரிடம் (பணி​யாளர் தொகுதி) சமர்ப்​பிக்க வேண்​டும்.


அதே​போல, நேர்​முக உதவி​யாளர்​கள் (மேல்​நிலை), மேல்​நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்​கள், முது​நிலை ஆசிரியர்​கள் ஆகியோர் இணை இயக்​குநரிடம் (மேல்​நிலைக் கல்​வி) சமர்ப்​பிக்க வேண்​டும். எனவே, வருங்​காலங்​களில் ஊதிய முரண்​பாடு சார்ந்த கோப்​பு​களை உரிய விதி​களின்​படி பரிசீலித்து சம்​பந்​தப்​பட்ட இணை இயக்​குநர்​களுக்கு அனுப்ப வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள் ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent