இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர் சேர்க்கை அதிகரிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

திங்கள், 30 மே, 2022

 





அரசு பள்ளிகளில், ஆதி திராவிடர் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், ஆதி திராவிடர் மாணவர் சேர்க்கை, 20 சதவீதத்துக்கு மேல் உள்ளது.


ஆனால், சில பள்ளிகளில் 18 சதவீதத்துக்கும் குறைவாக சேர்க்கை உள்ளது. மேலும், 1,000 பள்ளிகளில், 5 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ளதாக, பள்ளிக்கல்வி துறைக்கு கடிதம் வந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆதி திராவிடர் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent