இந்த வலைப்பதிவில் தேடு

'இந்து தமிழ்' - அன்பாசிரியர் விருது: பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

திங்கள், 3 பிப்ரவரி, 2020

'இந்து தமிழ் திசை' சார்பில் அன்பாசிரியர் விருது: பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்




மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்று விடாமல், திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, பள்ளியையும் மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலர். 

​அந்த நல்லடையாள ஆசிரியர்களை 'அன்பாசிரியர்' என்ற விருதோடு கவுரவிக்க, பெருமையுடன் காத்திருக்கிறது 'இந்து தமிழ் திசை'.​ தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இந்த முன்னெடுப்புக்குத் துணை நிற்கிறது. ​யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?​ 


* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள்.​ 

* தொடர்ச்சியாகக் கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.​என்ன செய்ய வேண்டும்?​ 

* 'இந்து தமிழ் ' இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.​ 

* அதனுடன் சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள்/ வீடியோக்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் அனுப்ப வேண்டும். 

* இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை, 124, வாலஜா சாலை, சென்னை- 2 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பலாம். அன்பாசிரியர் தேர்வு முறை​ 


* விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.

* தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 'இந்து தமிழ்' அலுவலத்தில் முதல் கட்ட நேர்காணல் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும். 

ஆசிரியர்கள், அவர்களின் மண்டலத்துக்கு ஏற்றபடி மேற்கண்ட நான்கு நகரங்களில் ஒன்றுக்கு நேரில் வர வேண்டியிருக்கும். 

* நேர்காணலுக்கு தன்னிடமுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களை ஆசிரியர்கள் எடுத்து வரவேண்டும். 

* மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிக்கட்ட நேர்காணல் பிப்ரவரி 16-ம் தேதி நடத்தப்படும். ​ 

* மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 37 பேருடன் புதுச்சேரி சேர்த்து, 38 பேருக்கு பிப்ரவரி 23-ம் தேதி 'அன்பாசிரியர்' விருது வழங்கப்படும். 


 எப்படி விண்ணப்பிப்பது?- https://connect.hindutamil.in/ இணைய முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 7, 2020. 

கூடுதல் தகவல்களுக்கு: முருகேசன் - 9444360421



Anbasriyar award for 'Hindu Tamil direction': School teachers can apply


There are many teachers who provide a unique education to the students and not just stand out, but also nurture skills, social care, virtues and promote the school. The Hindu Tamil Orientation is proudly awaiting the honors of the well-educated teachers with the title 'Anabasriyaar'. 

* Teachers who work best in government and government aided schools. 

* Leading teachers who consistently teach should be eligible to apply for the award. 

* What should be done by submitting the application form on 'Hindu Tamil' website. Self-Disclosure, Achievements p Manual / videos, teacher's nanmuyarcikalukkup activities after the pupils have to send evidence of the progress. 

* Those who cannot be sent via the Internet, can send by mail to the Anubhashri Awards Group, Hindu Tamil Direction, 124, Walaja Road, Chennai-2. After the applications are considered, the whole of Tamil Nadu and Pondicherry will be divided into four zones. 


* The first phase of the interview will be held on February 9 at the 'Hindu Tamil' office in Chennai, Coimbatore, Madurai and Trichy. Teachers are required to visit one of the four cities listed above to suit their region. 

* Teachers should take photos, videos and other details of the interview. 

* The final interview will be held on the 16th of February for senior level educators. 

* Puducherry, with 37 per person per district, will be given the 'Anabasriyar' award on February 23. 

How to apply - https://connect.hindutamil.in/ Click on the web address and apply. 

Deadline to apply: February 7, 2020. 

For more information: Murugesan - 9444360421

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent