இந்த வலைப்பதிவில் தேடு

B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை கால அவகாசம்

வியாழன், 10 ஜூலை, 2025

 




அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​புக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வி்ததுள்​ளார்.


இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு கல்வி ஆண்​டில் அரசு மற்​றும் அரசு உதவி​பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் பி.எட். மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்​கியது. இதற்​கான கடைசி நாள் ஜூலை 9 (நேற்​று) முடிவடைந்​தது.


இந்​நிலை​யில், மாணவர்​கள் நலன் கருதி பிஎட் படிப்​புக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது. எனவே, பிஎட் படிப்​பில் சேர விரும்​பும் மாணவர்​கள் www.tngasa.in என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி வரு​கிற 21-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்.


விண்​ணப்​பங்​கள் பரிசீலனை செய்​யப்​பட்டு தகு​தி​யுள்ள மாணவர்​களின் தரவரிசை பட்​டியல் ஜூலை 31-ம் தேதி வெளி​யிடப்​படும். விரும்​பும் கல்​லூரியை தேர்​வுசெய்​வதற்​கான கலந்​தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடை​பெறும். கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​படும்.


மாணவர்​கள் தங்​களுக்​கான கல்லூரி ஒதுக்​கீட்டு ஆணையை www.iwiase.ac.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட கல்​லூரி​யில் சேர்ந்து கொள்​ளலாம். அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் முதல் ஆண்டு மாணவர்​களுக்​கான வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்​கும். இவ்​வாறு அவர்​ கூறி​உள்​ளார்​.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent