இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 09.09.2025

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2025



திருக்குறள்: 

குறள் 503: 

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் 

இன்மை அரிதே வெளிறு.  



விளக்க உரை: 

அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.


பழமொழி :

  • A journey of kindness never ends.    
  • அன்பின் பயணம் ஒரு போதும் முடிவதில்லை.


இரண்டொழுக்க பண்புகள் :

1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2 இயற்கை சமநிலை காப்பேன்.


பொன்மொழி :

ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை படிப்படியாக அடைதலே வெற்றியாகும் -  நைட்டிங்கேல்


பொது அறிவு : 

01. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?

  •  எம். பாத்திமா பீவி
  • M. Fathima Beevi,



02.மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 

  • ஹிப்போகிரேட்டஸ் -Hippocrates


English words :

Run out off – nothing left, எல்லாம் காலி ஆகி விட்டது


Grammar Tips: 

 If You ,third person singular and I comes as subject we have to follow as 

2nd person+3rd person singular+I


Example 

You,Ramu and I got this book



அறிவியல் களஞ்சியம் :

 உலகில் புதிதாக ஒரு நீல மண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நீல மண்டலம் என்பது உலகின் மற்ற பகுதிகளின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகம் இருக்கும் பகுதி. இங்கு 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் இருப்பர். உலகில் ஏற்கனவே லோமா லின்டா - அமெரிக்கா, நிகோயா - கோஸ்டாரிகா, சர்டின்யா - இத்தாலி, இகரியா - கிரீஸ், ஒகினவா - ஜப்பான் ஆகிய ஐந்து இடங்கள் நீல மண்டலமாக வரையறுக்கப்பட்டு உள்ளன. தற்போது இந்த வரிசையில் பின்லாந்தின் அஸ்ட்ரோபோதின்யா பகுதி இடம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர்.


செப்டம்பர் 09

மா சே துங்  அவர்களின் நினைவுநாள்



மா சே துங் (About this soundMao Zedong (உதவி·தகவல்), Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த 

கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்



நீதிக்கதை

 மகா கஞ்சனின் கதை

கந்தன் என்ற ஒரு மகா கஞ்சன், ஆலங்குடி என்ற ஊரில் வசித்து வந்தான். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு சென்றார். 


விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர். 


அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த விமானி ஒருவர், நீங்கள் இருவரும் வாருங்கள் ஆளுக்கு நூறு ரூபாய் தான் வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம் என்றார். கஞ்சனுக்கு ஆர்வம் தான். ஆனால் செலவுக்கு பயந்து நாங்கள் வரவில்லை, என்றான். 


அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, நீங்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டால், இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும் என்றார். 


கஞ்சன் தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான். விமானம் தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சத்தம் போடாமல் இருந்தான். விமானத்தைத் தரை இறக்கினார் விமானி. 


கஞ்சனுக்கு கை கொடுத்து, நான் பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, வேறு யாராக இருந்தாலும் சத்தம் போட்டுருப்பார்கள். ஆனால், நீங்கள் சிறு சத்தம் எழுப்பவில்லை. எப்படி இது உங்களால் முடிந்தது? என்று கேட்டார் விமானி. 


நான் கூட, ஒரே ஒரு சமயம், என் மனைவி, விமானத்தில் இருந்து கீழே விழுந்தபோது! கத்த நினைத்தேன். நல்லவேலை கத்தாமல் இருந்தேன். கத்தியிருந்தால் கட்டணம் செலுத்த வேண்டிருக்கும் என்றான் கஞ்சன். அதை கேட்ட விமானி மயங்கி விழுந்தார். 


நீதி :

சிக்கனம் இருக்கலாம் ஆனால், கஞ்சத்தனம் இருத்தல் கூடாது.


இன்றைய செய்திகள் - 09.09.2025


⭐TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.


⭐ குளங்களைத் தூர்வாரி, தண்ணீர் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளது.


⭐ கேரளாவில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 5 பேர் இறந்திருப்பது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.


🏀இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி நடக்கிறது.


Today's Headlines

⭐Extension of the deadline to apply for Tn TET exam. 


⭐The Chennai corporation has started the work of dredging the ponds and increasing the water capacity.


⭐ The death of 5 people due to amoebic encephalitis in Kerala has created fear among the people of Kerala. 


 SPORTS NEWS 

🏀 Shubman Gill appointed as the vice-captain of the Indian team for the Asia Cup series.


🏀The India-Pakistan match will be held on the 14th.


Prepared By

Covai women ICT_போதிமரம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent