இந்த வலைப்பதிவில் தேடு

திறன் இயக்க மாணவர்களுக்கு தொடர் பயிற்சி - பள்ளிக்கல்வித் துறை திட்டம்

திங்கள், 10 நவம்பர், 2025

 



அரசுப் பள்​ளி​களில் திறன் இயக்க மாணவர்​களுக்​கும் அரை​யாண்​டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்​டுமென பள்​ளிக் கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.


இது தொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடம் மற்​றும் கணிதத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் திறன் இயக்​கம் கடந்த ஜூலை​யில் அமல்​படுத்​தப்​பட்​டது. இந்த திட்​டத்​துக்​காக தேர்​வான மாணவர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்டு காலாண்​டுத் தேர்வு நடத்​தப்​பட்​டது.



தேர்வு முடிவு​களின்​படி அடிப்​படை கற்​றல் விளைவு​கள் பகு​தி​யில் அனைத்து மாணவர்​களுக்​கும் தேர்ச்சி பெற இன்​னும் கூடு​தல் காலஅவ​காசம் தேவைப்​படு​கிறது. எனவே, இந்த திட்​டத்​தில் தேர்​வான அனைத்து மாணவர்​களும் அடிப்​படை கற்​றல் விளைவை அடை​யும் வகை​யில் அடுத்த 6 வாரங்​களுக்கு (அரை​யாண்​டுத் தேர்வு வரை) தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்​டும். தினம் ஒரு பாடம் என 90 நிமிடங்​கள் கற்​பிக்​கப்பட வேண்​டும்.



திறன் இயக்​கத்​துக்கு தேர்​வான அனைத்து மாணவர்​களும் மாதாந்​திர மதிப்​பீட்​டுத் தேர்​வில் பங்​கேற்​பது அவசி​யம். நடப்பு மாதத்​துக்​கான மாதாந்​திரத் தேர்வு நவம்​பர் 25 முதல் 27-ம் தேதி வரை வழக்​க​மான நடை​முறை​யின்​படி நடை​பெறும். திறன் இயக்​கத்​தில் அல்​லாத மாணவர்​களுக்கு வழக்​க​மான நடை​முறை​யின்​படி அரை​யாண்​டுத் தேர்வு நடத்​தப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent