இந்த வலைப்பதிவில் தேடு

கோரோனா - அரசு அலுவலர், ஆசிரியர்கள் 1 நாள் ஊதியம் - சங்கம் அரசுக்கு கோரிக்கை

செவ்வாய், 24 மார்ச், 2020

கொரோனா நோய்‌ தொற்றை சரிசெய்ய முதலமைச்சரின்‌ நிவாரண நிதிக்கு அரசு அலுவலர்‌, ஆசிரியர்களின்‌ ஒரு நாள்‌ ஊதியத்தை பிடித்தம்‌ செய்துகொள்ளலாம்‌ என தமிழ்நாடு அரசு அலுவலர்‌ ஒன்றியம்‌ அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அலுவலர்‌ ஒன்றியம்‌ வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில்‌ கொரோனா நோய்‌ தொற்றிலிருந்து பொதுமக்களை பாது காக்க அரசு சார்பில்‌ எடுக்கப்பட்டுவரும்‌ நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர்‌ ஒன்றியம்‌ நன்றியை தெரிவித்‌ துக்கொள்கிறது. இக்கடினமான சூழலில்‌ கொரோனா நோய்‌ தொற்றிலிருந்து தமி ழக மக்களை பாதுகாக்க எடுக்கப்படும்‌ அரசின்‌ நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும்‌ வகையில்‌ 


தமிழகத்தில்‌ உள்ள அமைப்பு சாரா பணியாளர்கள்‌, தினக்கூலி பணியாளர்கள்‌ மற்றும்‌ ஏழை. எளிய மக்களுக்கு உதவிடும்‌ வகை யில்‌ தமிழக அரசில்‌ பணிபுரியும்‌ அரசு அலுவலர்‌, ஆசிரியர்களது ஒரு நாள்‌ ஊதியத்தை முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு வழங்கிட இசைவு தெரிவித்துக்கொள்கிறோம்‌. மேலும்‌. ஒருநாள்‌ ஊதியத்தை மார்ச்‌ 2020ம்‌ மாத சம்பளத்தில்‌ பிடித்துக்‌ கொள்வதற்கான அரசாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌. 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent