இந்த வலைப்பதிவில் தேடு

குழந்தைகளுக்கு கூற தமிழ் விடுகதைகள் - 2

புதன், 1 ஏப்ரல், 2020




விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 2


1. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? பட்டுத்துணி 

2. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு 

3. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன? பற்கள் 

4. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? அகப்பை 

5. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? சூரியன் 


6. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? சோளக்கதிர் 

7. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு 

8. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல் 

9. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? நிழல் 

10. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent