இந்த வலைப்பதிவில் தேடு

பெற்றோரே! உங்கள் பிள்ளைகளுக்காக இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2020




*பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்*

பல ஆண்டுகளுக்கு முன்பு, *சாதாரண, படிப்பறிவற்ற பெற்றோர்* தங்கள் குழந்தைகளை

🔹 மருத்துவர்கள்,

🔹 பொறியாளர்கள்,

🔹 அறிவியலாளர்கள்,

🔹 கணக்காளர்கள்,

🔹 வழக்குரைஞர்கள்,

🔹 கட்டிடப் பொறியாளர்கள்,

🔹 தொழிலதிபர்கள் எனப்படும் *Group 'A'* குழந்தைகளை உருவாக்கினார்கள்.



இந்த *Group 'A* குழந்தைகளில் பெரும்பாலும், தொடக்கப் பள்ளியிலிருந்து,தாங்களே போராடி, *மிகப் பெரிய பதவிகளை* அடைந்தனர். அவர்கள்

👉🏾 *வெறுங்காலில் நடந்தனர்*

👉🏾 *காடுகளுக்குச் சென்றனர்*

👉🏾 *தண்ணீர் பிடித்தும், விறகு சேகரித்தும் வேலை செய்தனர்*

👉🏾 *செல்லப் பிராணிகளைக் கவனித்தனர்*

👉🏾 *வாழ்க்கை நடத்த, பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை செய்தனர்*

இன்றோ *Group A* பெற்றோர் *Group 'B'* குழந்தைகளை உருவாக்குகின்றனர்.
இந்த *Group B* குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் மீது
🔹 அதிக கவனம் செலுத்துகின்றனர்

🔹 பாலர் பள்ளி முதல், கல்லூரி வரை, அவர்களது வீட்டுப் பாடம், செய்முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உதவுகின்றனர்.

🔹 குழந்தைகள், அதிகக் கட்டணம் பெறும் பள்ளிக்குச் செல்ல, தனிக் கார், ஓட்டுனர், வெளிநாட்டில் படிப்பு எனப் பல வசதிகளைத் தருகின்றனர்.



🔹 குழந்தைகளால், காலை முதல் இரவு வரை, திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது.

🔹 குழந்தைகளை, ராஜா, ராணிகளைப் போல, அதிக மதிப்புக் கொடுத்து, வளர்க்கின்றனர்.

🔹 வீட்டில், குழந்தைகள், சிறு வேலைகளைக் கூட செய்வதில்லை.

🔹 உணவு, மேசைக்கு வந்து விடுகிறது.

🔹 சாப்பிட்ட தட்டுகள் கூட பெற்றோராலோ, வேலைக்காரிகளாலோ கழுவப்படுகின்றன.

🔹 விலையுயர்ந்த துணிமணிகள், போக்குவரத்துச் சாதனங்கள் முயற்சியின்றிக் கிடைக்கின்றன.

🔹 *பணம் வீணாகிறதே என்ற கவலையில்லை* !!!.

🔹 பெற்றோர் இத்தனை உதவிகள் செய்தும் � அவர்களுள் ஒரு சிலரால் மட்டுமே, சரியாகப் *பேசவும்* or *எழுதவும்* முடிகிறது. 😏

� *Group 'A' குழந்தைகள் * தங்கள் பெற்றோரையும் | குழந்தைகளையும்* நன்கு கவனித்துக் கொண்டனர். *Group 'B', பெற்றோர் தங்கள் குழந்தைகள் 30+ வயதைக் கடந்த பிறகும், சொந்தக்காலில் நிற்க வைக்க உதவுகின்றனர்*.‼

� உதவி பெற்றே வளர்ந்த குழந்தைகள் இன்றும் பெற்றோரின் உதவியையே நாடுகின்றனர். தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள இயலாத போது, பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் உதவுவது எப்படி?
இறுதிக் காலத்தில், பெற்றோர், தாங்களே வாழ வேண்டியுள்ளது.



😴 *நீங்கள் இதில் எந்த வகை*❓

🏮 தேவையின்றி குழந்தைகளுக்கு வலியச் சென்று உதவாதீர்கள்.

🏮 உங்கள் குழந்தைகள் *அறிவாளியாக, புத்திசாலியாக, பலசாலியாக வளரட்டும்*.

🏮 வாழ்க்கையின் *நிதர்சனம், உண்மைகளை* நேரடியாகச் சந்தித்து *தானாகச் செயல்படும் இளைஞராக வளரட்டும்*

👉🏾 கடினமான நேரங்களை எதிர்கொள்ள

👉🏾 மற்றவர்களை மதிக்க

👉🏾 தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.

� உங்கள் பெற்றோரால் முறைப்படி வளர்க்கப்பட்ட நீங்கள், உங்கள் குழந்தைகளையும் *பயனுள்ள* குழந்தைகளாக வளருங்கள்...

💐*மனம் நிறைந்த வாழ்த்துகள்*💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent