இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுக்கும் மதுரை! சு.வெங்கடேசன் பெருமிதம்

ஞாயிறு, 3 மார்ச், 2024

 

மாணவர்களுக்கு ரூ.168 கோடி கல்விக்கடனாக வழங்கி மதுரை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.


அரசு கல்வி நிறுவனங்களை விட, தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மாணவர்களின் கல்வி கற்கும் வாய்ப்பு வெகுவாக குறையும் என எச்சரிக்கப்பட்டது. இதனை சரி செய்ய வங்கிகள் கல்விக்கடனை கொடுக்க முன்வர வேண்டும் என்றும் கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாட்டில் கல்விக்கடன் அதிகம் வழங்கும் மாவட்டங்களில் மதுரைதான் எப்போதும் முன்னணியில் இருக்கிறது.


இந்த ஆண்டும் மாணவர்களின் கல்விக்கு ரூ.198 அள்ளிக்கொடுத்து மதுரை வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


"2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும், வங்கி நிர்வாகமும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து கூட்டாக விரிவான முயற்சி எடுத்தன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.125 கோடி என்ற இலக்கைத் தாண்டி இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2627. இவர்களில் 2078 பேருக்கு 168.28 கோடி ரூபாய் கல்விக்கடன் கெ கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 79% பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.




வழங்கப்பட்டுள்ள கல்விக்கடனில் தேசியமயமாக்கப்பட்ட 12 வங்கிகள் 1521 மாணவர்களுக்கு ரூ.150.69 கோடி வழங்கியுள்ளன. 21 தனியார் வங்கிகள் 557 பேருக்கு ரூ.17.59 கோடி வழங்கியுள்ளன. கனரா வங்கி 387 மாணவர்களுக்கு ரூ.44.5 கோடி வழங்கியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 378 மாணவர்களுக்கு ரூ.32.99 கோடி வழங்கியுள்ளது. கூடுதல் முயற்சி எடுத்து அதிக கல்விக்கடன் வழங்கியுள்ள இந்த இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 74% கடன் வழங்கியுள்ளன. கடந்த முறையை விட இந்த ஆண்டில் தனியார் வங்கிகள் 90% க்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு கடன் வழங்கியுள்ளன. தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியில் கல்விக்கடன் 497 விண்ணப்பங்களில் 494 விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12.37 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கியுள்ளது.


இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் பெற்றுத்தரும் இயக்கத்தில் நான்கு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent