இந்த வலைப்பதிவில் தேடு

நிற்காமல் சென்ற பேருந்தை ஓடிச் சென்று பிடித்து தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவி - மதிப்பெண் என்ன தெரியுமா?

வெள்ளி, 9 மே, 2025

 



நிற்காமல் சென்ற அரசு பேருந்தை ஓடிச் சென்று பிடித்து தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவி 437 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் மாணவி சுஹாசினி, ஆலங்காயத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் படித்து வந்தார் . கடந்த மார்ச் 25ஆம் தேதி அன்று கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத செல்வதற்காக காத்திருந்தார்.


அப்போது அவ்வழியாக வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்காயம் வரை செல்லக் கூடிய அரசு பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. ஓட்டுநர் முனிராஜ் மற்றும் நடத்துநர் அசோக் குமார் ஆகியோர் பேருந்தை வேகமாக இயக்கியதால் பேருந்து பின் தொடர்ந்து ஓடி மாணவி, பேருந்தில் ஏறி தேர்வுக்கு சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


உடனடியாக இது குறித்து ஆம்பூர் பணிமனை கிளை மேலாளர் கணேசன், திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் குமரன், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் பேருந்து ஓட்டுநர் முனிராஜை தற்காலிக பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.


இந்நிலையில் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு பேருந்தில் ஓடிச்சென்று ஏறிய பள்ளி மாணவி சுஹாசினி தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 68 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 61 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 56 மதிப்பெண்களும், தாவரவியல் பாடத்தில் 81 மதிப்பெண்களும், உயிரியியல் பாடத்தில் 78 மதிப்பெண்களும் எடுத்து மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 437 மதிப்பெண் எடுத்துள்ளார்.



72.83 % சதவிகித்துடன் தேர்ச்சி பெற்று மாணவி சுஹாசினி அசத்தியுள்ளார். மேலும் மாணவி பேருந்தில் ஓடிச்சென்று ஏறி தேர்வு எழுதிய இயற்பியல் பாடத்தில் 61 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் மாணவியை அவரது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent