இந்த வலைப்பதிவில் தேடு

முதலிடம் பிடித்த மாணவியிடம் அலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெள்ளி, 9 மே, 2025

 



பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி ஓவியாஞ்சலி, 600 க்கு 599 மார்க் பெற்றுள்ளார்.


பழநி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் - சாந்தி தம்பதியின் மகள் ஓவியாஞ்சலி. இவரது தந்தை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கணக்காளராகவும், தாய் பழநி ஒன்றிய அலுவலகத்திலும் பணிபுரிகின்றனர்.


பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓவியாஞ்சலி படித்தார். பிளஸ் 2 தேர்வில் இவர் 600 க்கு 599 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ், வணிகவியல் பொருளியல், கணக்கியல் கணினி பயன்பாடு, தமிழ் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். மாணவியை, பள்ளிச் செயலர் குப்புசாமி, நிர்வாக அலுவலர் சிவக்குமார், முதல்வர் கதிரவன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சக மாணவர்கள் பாராட்டினர்.


12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ள மாணவி ஓவியாஞ்சலியிடம் திருச்சியில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் பேசினார். 


பொருளாதார துறையில் சாதனை படைக்க வேண்டும். அதுசார்ந்த உயர் படிப்பில் சேர வேண்டும்” எனும் விருப்பத்தைத் தெரிவித்த மாணவிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, இலட்சியம் நிறைவேற துணை நிற்போம் என முதலமைச்சர் உறுதியளித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent