இந்த வலைப்பதிவில் தேடு

குழந்தைகளுக்கு புரியும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்

சனி, 14 ஜூன், 2025

 



துவக்கப் பள்ளி குழந்தைகளை கற்பதில் ஆர்வம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும்; அவர்களுக்கு புரியும் வகையில், பாடம் கற்பிக்க வேண்டும் என எண்ணும், எழுத்தும் பயிற்சியில் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


பள்ளி கல்வித்துறை, திருமூர்த்தி நகர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாம், நொய்யல் வீதி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு பாடம் கற்பிக்கும், 425 ஆசிரிய, ஆசிரியைகள் பயிற்சியில் பங்கேற்றனர்.


பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு ஆசிரியர் கையேடு, பயிற்சி நுால், பாடநுால் ஒருங்கிணைத்து வழங்கப்பட்டது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, ராஜன், சரவணக்குமார், கவுசல்யாதேவி, வட்டார வள மைய பயிற்றுநர்கள் கோபிநாத், கீதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.


அதில், துவக்கம் முதலே மாணவ, மாணவியர் புரிந்து படிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி குழந்தைகளை கற்பதில் ஆர்வம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு புரியும் வகையில், ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். பாடப்புத்தகத்தை முழுமையாக அறிந்து படிக்க கற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.


திருப்பூர் வடக்கு பகுதி துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்டம் முழுதும், 13 வட்டாரங்களில் அந்தந்த வட்டார அளவில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent