இந்த வலைப்பதிவில் தேடு

இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு

செவ்வாய், 1 ஜூலை, 2025

 




இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.



இதுகுறித்து மாவட்ட கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்க கல்வி துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை: தொடக்க கல்வி துறை​யில் மலை சுழற்சி மாறு​தல் கலந்​தாய்வு (21 ஒன்​றி​யங்​களுக்கு மட்​டும்) ஜூலை 2-ல் நடை​பெறும். இடைநிலை ஆசிரியர்​களுக்​கான பணிநிர​வல் கலந்​தாய்வு ஒன்​றி​யம் கல்வி மாவட்​டத்​துக்​குள் ஜூலை 3-ம் தேதி​யும், வரு​வாய் மாவட்​டத்​துக்​குள் ஜூலை 4-ம் தேதி​யும் நடத்​தப்​படும்.



இடைநிலை ஆசிரியர்​களின் பொது மாறு​தல் கலந்​தாய்வு ஜூலை 5-ல் தொடங்கி 11-ம் தேதி வரை நடை​பெறும். தொடக்​கப் பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கான கலந்​தாய்வு ஜூலை 19, 21-ம் தேதி​களி​லும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கான கலந்​தாய்வு ஜூலை 22, 23-ம் தேதி​களி​லும் நடத்​தப்​படும்.



மேலும், பட்​ட​தாரி ஆசிரியருக்​கான இடமாறு​தல் கலந்​தாய்வு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை நடை​பெறும். இதுத​விர, இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் தேர்​வான நபர்​களுக்​கான நேரடி பணி நியமன கலந்​தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி அந்​தந்த மாவட்​டங்​களில் நடத்​தப்பட உள்​ளது. கலந்​தாய்வு நடத்​து​வதற்​கான மின் இணைப்​பு, இணை​யதளம், இருக்கை வசதி உள்​ளிட்டஅனைத்து முன்​னேற்​பாடு​களை​யும் மாவட்ட கல்வி அலு​வலர்​கள் மேற்​கொள்ள வேண்​டும்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent