தமிழகம் முழுவதும் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த ஜூலை, 1ல் தொடங்கி, 25 வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வு தர்மபுரியில் ஆன்லைன் மூலம் சி.இ.ஒ., ஜோதிசந்திரா முன்னிலையில் நடக்கிறது.
கடந்த, 1 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் பணி மாறுதல் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது. 2ல் வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வும், 3ல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தது.
தர்மபுரி மாவட்டத்தில், 31 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் இடமாறுதலுக்கு, 53 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லாததால், தற்போது பணியாற்றி வரும் பள்ளிகளில் பணியாற்ற அனுமதி பெற்றனர்.
21 உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டது. கடந்த, 3ல் நடந்த கலந்தாய்வின் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பணி மாறுதலில், 17 பேர் சென்றனர்.
கடந், 4 அன்று முதுகலை ஆசிரியர்களுக்கு நடந்த பணிமாறுதலில், 476 முதுகலை ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 32 ஆசிரியர் பணி மாறுதலாக மாற்றுப்பள்ளிக்கு சென்றனர். 158 ஆசிரியர்கள், 'ஆப்சென்ட்' ஆனார்கள்.
290 ஆசிரியர்கள் பணிமாறுதலில் விருப்பம் இல்லை என, கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை. கடந்த, 11 அன்று அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில், 11 உடற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக