பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உதவி பெறுவதில் உள்ள முரண்பாடுகளை நீக்கவேண்டும்.
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் சக்திவேல், முன்னாள் மாவட்ட தலைவர் தீனதயாளன், மாவட்ட செயலாளர் ரவி, பொருளாளர் சக்திவேல், மகளிர் அணி செயலாளர் அமலிடெய்சி உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக