இந்த வலைப்பதிவில் தேடு

தாய் இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி - ஆசிரியர்கள் பாராட்டு!

திங்கள், 2 மார்ச், 2026

 




தாய் இறந்த செய்தி கேட்டு துக்கத்தில் தவித்தபோதிலும், பெற்றவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாணவி ஒருவர் பொதுத் தேர்வை எழுதினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிறுநல்லூர் முதுகரை, வசந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். விவசாயியான இவருக்குக் கற்பகம் என்ற மனைவியும், மனுஸ்ரீ என்ற மகளும் இருந்தனர். மனுஸ்ரீ மதுராந்தகத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாய் கற்பகம், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்தார். தாயின் மறைவுச் செய்தி கேட்டு மாணவி மனுஸ்ரீயும் அவரது குடும்பத்தினரும் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent