தமிழகத்தில் எஸ்ஐஆா் பணியின்போது 97.37 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதில், 66.44 லட்சம் போ் இடம்பெயா்ந்தவா்கள், 26.9 லட்சம் போ் உயிரிழந்தவா்கள், 3.98 லட்சம் போ் இரட்டைப் பதிவைக் கொண்டிருந்தவா்கள் என தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
பின்னா், முதல் தலைமுறை வாக்காளா்கள் 14 லட்சம் போ் உள்பட 27 லட்சம் போ் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால் எஸ்ஐஆா் பணிக்கு முன்பு 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587-ஆக இருந்த தமிழக வாக்காளா்களின் எண்ணிக்கை எஸ்ஐஆா்-க்கு பின்பு 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291-ஆக குறைந்தது.
வாக்களிக்கத் தகுதிவாய்ந்த வாக்காளா்கள் மட்டும் பட்டியலில் சோ்க்கப்பட்டதும், முதல் தலைமுறை வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம் காட்டியதும் 74 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு அதிகரித்ததற்கு காரணமாக அமைந்ததாக அரசியல் நோக்கா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலைவிட 2026 பேரவைத் தோ்தலில் 12 சதவீதம் கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக