இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு உத்தரவு

ஞாயிறு, 28 ஜூலை, 2019






பள்ளி மாணவர்களுக்கு, தொண்டை அடைப்பான் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தின் சென்னை, ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில், குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

'பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும். சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, கழுத்துப்பகுதி வீக்கம், நெறி கட்டுதல் நோயின் முக்கிய அறிகுறிகள். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சளியில் ரத்தம் வெளியேறலாம்' என்கின்றனர் மருத்துவர்கள்.'நோயை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

குழந்தை பிறந்ததில் இருந்து, 15 வயது வரை, உரிய பருவத்தில் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். குறிப்பிட்ட வயதை குழந்தைகள் கடந்த பின், தடுப்பூசி போடுவதை பெற்றோர் பலர் தவிர்த்து விடுகின்றனர்.

நோய் எதிர்ப்பு திறன் குறைந்து விடுவதால், தொண்டை அடைப்பான் உட்பட நோய்கள் தாக்குகின்றன.ஏராளமான குழந்தைகளுக்கு, தற்போது, தொண்டை அடைப்பான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பள்ளிகளில் படிக்கும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இதற்குத் தலைமையாசிரியர்கள், ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்' என, பொது சுகாதாரத்துறையினர் கூறினர்.
கூடுதல் டாக்டர்கள்பணியமர்த்த அறிவுரை

தொண்டை அடைப்பான் நோய்க்கு, ஈரோடு சத்தியமங்கலம் கடம்பூரை சேர்ந்த சிலர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை குனியமுத்துார் பகுதியிலும், சிறுவனுக்கு இப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலைவாழ் கிராமங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறிகுறிகள் உள்ள அனைவருக்கும், இந்நோய் உள்ளது என அர்த்தமில்லை. இருப்பினும், அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, கூடுதல் டாக்டர்களையும் பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent