இந்த வலைப்பதிவில் தேடு

அரையாண்டு தேர்வு: மாணவர்கள் குழப்பம்

திங்கள், 5 டிசம்பர், 2022

 



தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு என்ற அரையாண்டு தேர்வு டிச.16ம் தேதி துவங்க உள்ளது. இதுகுறித்து பள்ளிகளில் பொதுவான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


ஆனால் இந்த தேர்வு குறித்து பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து பள்ளிகளுக்கு தேர்வு கால அட்டவணை தேர்வுக்கான பாட விபரங்கள் வெளியாகவில்லை.


காலாண்டு தேர்வுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்ததுபோல் அரையாண்டு தேர்வுக்கும் மாவட்ட வினாத்தாள் முறையா அல்லது மாநிலம் முழுதும் பொதுவான வினாத்தாள் முறையா என்றும் பள்ளிக் கல்வி இயக்குனரகமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களும் தெளிவுபடுத்தவில்லை. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் குழப்பம் அடைந்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent