இந்த வலைப்பதிவில் தேடு

பணியிடம் மாற்றப்பட்ட அரசு ஊழியா்களுக்கு காலதாமதம் இன்றி ஊதியம் வழங்க கோரிக்கை

திங்கள், 5 டிசம்பர், 2022

 

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசு ஊழியா்களுக்கு காலதாமதம் இன்றி ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து இக்கூட்டமைப்பின் கூட்டமைப்பு தலைவா் அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக பணியாளா்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் அவா்களுக்கு பூஜியம் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டு பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் பெற்று வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனா்.


பல்வேறு அலுவலகங்களில் பணியிட மாறுதல் பெற்று இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.


கல்வித் துறை ஊழியா்கள் வங்கிகளில் வீட்டுகடன் தனி கடன் பெற்றவா்கள் மாதந்தோறும் தவணை பணம் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, உடனடியாக ஊதியம் வழங்க உத்தரவிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent