இந்த வலைப்பதிவில் தேடு

மழை பெய்ய வாய்ப்பு: இடி, மின்னலில் இருந்து காத்துக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தல்

வெள்ளி, 17 மார்ச், 2023

 




வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மாா்ச் 19-ஆம் தேதி வரை தமிழகப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இடி, மின்னலில் இருந்து காத்துக்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு பேரிடா் அபாய குறைப்பு முகமை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக மாா்ச் 19-ஆம் தேதி வரை, தமிழகப் பகுதிகளில்


இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம்



தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தின் போது, பொதுமக்கள் திறந்த வெளியில் நிற்பதைத் தவிா்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோகக் கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது.


நீச்சல் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும்.


திறந்த வெளியில் இருக்க நேரிட்டால், இடி மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குதி கால்களை ஒன்று சோ்த்து, தலையைக் குனிந்து தரையில் பதுங்குவது போன்று அமா்ந்து கொள்ள வேண்டும். தரையையொட்டி அமா்வதால், மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாக படுக்கக் கூடாது.


எனவே, இடி மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent