இந்த வலைப்பதிவில் தேடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் பதில்

செவ்வாய், 31 அக்டோபர், 2023

 



தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது முக்கியமாக இருக்கிறது. அதுபோல் ஏப்., மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்வு நடக்கலாம்.


பிளஸ்2 பொதுத்தேர்வை பொறுத்தவரை, செய்முறைத் தேர்வு முடிந்து, சிறு இடைவெளிக்குப் பிறகு பொதுத்தேர்வை துவங்க வேண்டி உள்ளது. ஜன., மாதம் திருப்புதல் தேர்வு நடத்த வேண்டி உள்ளது. டிச., மாதத்துக்குள் அரையாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் முடிக்க வேண்டிய பணிகள் வேகமாக நடந்து கொண்டுள்ளது.


எனவே, பொதுத்தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான் மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும். எனவே தீபாவளி முடிந்த பின்னர் பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு கட்டாயம் வெளியாகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent