இந்த வலைப்பதிவில் தேடு

30.01.2024 ( செவ்வாய் கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

வெள்ளி, 19 ஜனவரி, 2024

 


தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு 26.012024 முதல் 30.012024 வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு எதிர்வரும் 30.012024 ( செவ்வாய் கிழமை ) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது . 



மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 - ம் தேதி ( 10.02.2024 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , பணி நாளாக அறிவிக்கப்படுகிறது . இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் , இஆப . தெரிவித்துள்ளார் .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent