தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி , இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு ( புதன்கிழமை ) அன்று , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 29.03.2025 ( சனிக்கிழமை ) அன்று பணி நாளாக . அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் , நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது.
அரசு மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் , செலவாணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 12.03.2025 ( புதன்கிழமை ) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக