இந்த வலைப்பதிவில் தேடு

AI ஆசிரியர் அறிமுகம்

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

 



மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.


உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய மார்க்ரேட் என்று பெயரிடப்பட்ட ஏ.ஐ. ரோபோடிக் ஆசிரியர் ராமேசுவரத்தில் செயல்படும் கிரைஸ்ட் தி கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, நகரசபை சேர்மன் நாசர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் பில்லி கிரகாம் அனைவரையும் வரவேற்றார்.


ற்போது தமிழகத்தில் ஆசிரியர் வடிவத்திலும் களம் கண்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோ ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ முன் மாணவர்கள் வரிசையாக நின்று, பல்வேறு பாடங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றனர்.


இந்த கேள்விகளுக்கு ஏஐ ரோபோ சளைக்காமல் பதில் அளிக்கிறது. மேலும், மாணவர்களுக்கு பாட திட்டங்களை கற்பிப்பதுடன், அவர்களுடன் கைகொடுத்து இயல்பாக உரையாடுவதும் குறிப்பிடத்தக்கது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு உரையாடி மகிழ்கின்றனர். ரோபோவின் கீழ் பகுதியில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக நகர்ந்து செல்கிறது.


பள்ளி தரப்பில் கேட்டபோது, ‘‘மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏஐ ஆசிரியை மாணவர்கள் எழுப்பும் கேள்விகளை `சர்ச் என்ஜின்’ உதவியுடன் எதிர்கொண்டு பதில் அளிக்கிறது. இந்த ரோபோவால் 25 இந்திய மொழிகள் மற்றும் 25 சர்வதேச மொழிகளில் சரளமாக பேச முடியும்’’ என்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent