இந்த வலைப்பதிவில் தேடு

மேற்கு வங்கத்தில் வேலை இழந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

 



 மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016-ல் அரசுப் பள்​ளி​கள், அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு ஆசிரியர்​கள் தேர்வு செய்​யப்​பட்​ட​தில் முறை​கேடு​கள் நடந்​த​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக சிபிஐ விசா​ரணை நடத்தியது.


இந்த வழக்​கில் ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் அல்​லாத பணி​யாளர்​கள் 25,753 பேரின் பணி நியமனத்தை உயர் நீதி​மன்​றம் கடந்த ஆண்டு ரத்து செய்​தது. இதனை உச்ச நீதி​மன்​றம் கடந்த 3-ம் தேதி உறுதி செய்​தது.


இந்​நிலை​யில் வேலை இழப்பு மற்​றும் தங்​கள் சகாக்​கள் மீதான போலீஸ் நடவடிக்​கையை எதிர்த்து ஆசிரியர்​கள் நேற்று முன்​தினம் இரவு தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் தொடங்​கினர். கொல்​கத்​தா, சால்ட் லேக் பகு​தி​யில் உள்ள பள்​ளிப் பணி​கள் ஆணை​யம் வாயி​லில் இப்​போ​ராட்​டம் தொடங்​கியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent