இந்த வலைப்பதிவில் தேடு

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவர் படைப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி கடைசி நாள்

வெள்ளி, 4 ஜூலை, 2025

 



வாசிப்பு இயக்க புத்​தகங்​களுக்​கான மாணவர்​களின் படைப்​பு​களை ஜூலை 16-ம் தேதிக்​குள் அனுப்​பு​மாறு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.


தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்​களின் வாசிப்​புத் திறனை மேம்​படுத்​து​வதற்​காக வாசிப்பு இயக்​கம் என்ற திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் குழந்​தைகளின் வாசிப்பு நிலைக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற 4 பிரிவு​களில் புத்​தகங்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. முதல்​கட்​ட​மாக 53 புத்​தகங்​களும், 2-ம் கட்​ட​மாக 70 புத்​தகங்​களும் அரசுப் பள்​ளி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 3-ம் கட்​ட​மாக 81 புத்​தகங்​கள் அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.


இதையடுத்து, 4-ம் கட்ட புத்​தகங்​கள் உரு​வாக்​கப்​பட​வுள்​ளன. இந்த புத்​தகங்​கள் முழு​வதும் மாணவர்​களின் படைப்​பு​களு​டன் கொண்டு வரப்பட இருக்​கிறது. இதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களின் படைப்​பு​களை, ஆசிரியர்​கள் எமிஸ் தளம் மூல​மாக கடந்த ஜூன் 16-ம் தேதி​முதல் அனுப்பி வரு​கின்​றனர்.


வாசிப்பு இயக்​கத்​தின் 4-ம் கட்ட புத்​தகங்​களுக்கு படைப்​பு​களை அனுப்​புவதற்​கான கால அவகாசம் ஜூலை 16-ம் தேதி​யுடன் நிறைவு பெறுகிறது. எனவே, மாணவர்​களிட​மிருந்து படைப்​பு​களை விரை​வாகப் பெற்று அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்​டுமென மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent