இந்த வலைப்பதிவில் தேடு

80 மாணவர்​களின் உயிரை காத்த ஆசிரியர்

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

 




ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்​வார் மாவட்​டத்​தில் கடந்த சில நாட்​களுக்கு முன் மேகவெடிப்​பால் திடீரென பெரு மழை பெய்​தது. இதில் 50-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர்.


இந்​நிலை​யில் 80 மாணவர்களை காப்பாற்றிய சசோடி கிராம தொடக்​கப்​பள்ளி ஆசிரியர் ஹுக்​கும் சந்த் நேற்று கூறிய​தாவது: 


எங்கள் கிராமத்​தில் சீக்​கியர்​கள் இலவச உணவு வழங்க ஏற்​பாடு செய்​திருந்​தனர். அதற்​காக மாணவர்​களை உணவு சாப்​பிட அனுப்பு​மாறு அவசரப்​படுத்​தினர். அப்​போது காலை 11.40 மணி இருக்​கும். அன்று ஆகஸ்ட் 14-ம் தேதி.


மறு​நாள் சுதந்​திர தினம் என்​ப​தால், விழாவுக்​கான ஏற்​பாடு​களை செய்து கொண்​டிருந்​தோம். அதனால் மாணவர்​களை அனுப்பாமல் தாமதப்​படுத்​திக் கொண்​டிருந்​தேன். அந்த நேரத்​தில்​தான் பெரிய மலை ஒன்று பயங்கர சத்​தத்​துடன் இடிந்து சரிந்​தது. கிராமத்​தில் பல வீடு​கள் மண்​ணில் புதைந்​தன. அதைப் பார்த்​ததும், மூத்த மாணவர்​களை உயர​மான பகு​திக்கு ஓடும்​படி கத்தினேன்.


சிறிய குழந்​தைகளை பிடித்​துக் கொண்டு வெளி​யில் செல்​லாத​படி பார்த்​துக் கொண்​டேன். அதன் பின்​னர் இலவச உணவு வழங்​கும் இடத்​துக்கு சென்று பார்த்​தேன். அங்கு பலருடைய உடல்​கள் மிதந்து கொண்​டிருந்​தன. இடி​பாடு​களில் சிக்​கி​யிருந்த 30 பேரை வெளியில் கொண்டு வந்து காப்​பாற்​றினேன். ஆனால், என்​னுடைய சகோ​தரன் நிலச்​சரி​வில் உயி​ரிழந்து விட்​டார். இவ்​வாறு ஹுக்கும் சந்த் கூறி​னார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent