இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர் - இபிஎஸ் விமர்சனம்

திங்கள், 29 செப்டம்பர், 2025

 




தி​முக அரசின் மோச​மான செயல்​பாடு​களால் ஆசிரியர்​கள் கடும் மன உளைச்​சலில் உள்​ளனர் என்று அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். திண்​டுக்​கல் மாவட்​டம் வேடசந்​தூரில் பொது​மக்​களிடையே நேற்று மாலை அவர் பேசி​ய​தாவது: 


அதி​முக ஆட்​சியில் ஒரே ஆண்​டில் 11 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களை கொண்​டு​வந்​தோம். திமுக ஆட்​சி​யில் இது​வரை ஒரு மருத்துவக் கல்​லூரியை​யா​வது கொண்டு வந்​தார்​களா? தமிழகத்தை திறமையற்ற முதல்​வர் ஆள்​வ​தால் மக்​களுக்​குத் தேவையான திட்​டங்​கள் கிடைக்​க​வில்​லை.



சட்​டம் - ஒழுங்​கும் சீர்​குலைந்து விட்​டது. போதைப் பொருட்​கள் நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​த​வில்​லை. பெண்​கள், சிறுமிகளுக்கு பாது​காப்பு இல்​லை. கொலை, கொள்​ளை, வழிப்​பறி, பாலியல் வழக்​கு​கள் அதி​கரித்​து​விட்​டன. இப்​படிப்​பட்ட ஆட்சி தொடர வேண்​டு​மா? திண்​டுக்​கல் துணை மேயர் மகனுக்கு போதைப் பொருள் விற்​பனை​யில் தொடர்பு உள்​ள​தாக கர்​நாடக போலீ​ஸார் சம்​மன் வழங்​கி​ உள்​ளனர்.


அரசுப் பள்​ளி​களில் மாணவர் சேர்க்கை குறைந்​து​விட்​டது. போது​மான ஆசிரியர்​கள் இல்​லை. ஆசிரியர் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கி​ உள்​ள​தால் ஆசிரியர்​கள் கடும் மன உளைச்​சலில் உள்​ளனர். திமுக ஆட்​சி​யில் 992 புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் போடப்​பட்​டதாக​வும், அதில் 75 சதவீதம் நிறைவேற்​றப்​பட்​டதாக​வும் முதல்​வர் கூறுகிறார்.



இதன்​படி பார்த்​தால் 25 லட்​சம் பேருக்கு வேலை கிடைத்​திருக்க வேண்​டும். எனவே, முதல்​வர் சொல்​வது அத்​தனை​யும் பொய். வேடசந்​தூர் நூற்​பாலைகள் நிறைந்த பகுதி மின் கட்டண உயர்வு காரண​மாக பல தொழிற்​சாலைகள் மூடும்​நிலை​யில் உள்​ளன. 


அதி​முக ஆட்​சி​யில் குடிம​ராமத்து திட்​டத்​தைக் கொண்​டு​வந்​து, ஏரி, குளங்​களைத் தூர்​வாரினோம். இது​போன்று திமுக ஏதாவது சாதனை நிகழ்த்​தி​யிருக்​கிற​தா? 10 ரூபாய் என்​றாலே செந்​தில்​பாலாஜி நினை​வு​தான் வரும். பாட்​டிலுக்கு ரூ.10 வீதம் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல் செய்​கின்​றனர். இவ்​வாறு அவர் பேசி​னார்​.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent