இந்த வலைப்பதிவில் தேடு

பொறியியல் படிப்பு கலந்தாய்வு - இதுவரை 56,837 இடங்கள் நிரம்பின

புதன், 23 ஆகஸ்ட், 2023

 

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் இதுவரை 56,837 இடங்கள் நிரம்பியுள்ளன.


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 775 இடங்கள் நிரம்பின.


இதையடுத்து பொதுப் பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதன் முடிவில் 16,096 இடங்கள் நிரம்பின.


இதைத் தொடர்ந்து 2-வது சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 9-ல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 40,741 இடங்கள் நிரப்பப்பட்டன. அதில் 5,267 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டது. அந்த வகையில் முதல் 2 சுற்றுகளின் முடிவில் மொத்தம் 56,837 இடங்கள் நிரம்பியுள்ளன.


தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க 89,694 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு செப். 3-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதன்பின் உள்ள காலியிடங்கள் துணைக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் சுமார் ஒரு லட்சம் இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent