இந்த வலைப்பதிவில் தேடு

தற்காலிக பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

செவ்வாய், 13 டிசம்பர், 2022

 



அரசு பள்ளி  தற்காலிக பயிற்றுநர்களுக்கு நடைபெறவிருந்த விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குநர் சுதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 


அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு (ஓவியம்) இன்று (13.12.22) நடைபெறுவதாக இருந்த விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் கலந்தாய்விற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent